Showing posts with label சிந்தனைகள் சில. Show all posts
Showing posts with label சிந்தனைகள் சில. Show all posts

சிந்தனைகள் சில

10 Comments
கடவுள்?
            ஓவியத்தில் உறைகின்ற
            உயிருணர்வு
            ஒருங்கே நம் கருத்தினை
            கவர்வதுபோல்
            சிலையுருவில் உறைகின்ற
            கலைவடிவம்
            காண்போரின் மனச்சுமையை
            கலைகிறது
            கோயில்களின் கருவறையில்
            கடவுள்களாய் . . .

    மனிதன்:
            சென்று வரும் மூச்சொருநாள்
            சட்டென்று நின்று விடடால்
            மாண்டுவிட்டான் என்று சொல்லி
            மறைத்திடுவர் மன்னில் தள்ளி
            உடன்  பிறந்த உடலழகும்
            உதவாத பொருட் டாகும்
            இதையறியா மனித இனம்
            அழிவதுஏன் தினம் தினம் . . .

    பாவங்கள்:
            "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6: 23)
            பைபிளின் சாரம் இதுவென்றால் . . .
            மறைந்த இயேசுவும் பாவிதானோ???