Showing posts with label ஓ மனிதா.... Show all posts
Showing posts with label ஓ மனிதா.... Show all posts

ஓ மனிதா...

4 Comments

உலகை வெல்ல ஒருவன் போதும்
துணையை ஏனோ தேடுகிறாய்!

துணைகள் இருந்தும் தோற்றுப் போனால்
தனிமையில் நின்று வாடுகிறாய்!!

வெல்லும் சக்தி உனக்கே சோந்தம்
பிறரை எதற்கு நாடுகிறாய்?

உதவிகள் இன்றியும் உன்னால் முடியும்
உழைக்க ஏனோ தயங்குகிறாய்...

உழைப்பைக் கொண்டு தடைகளை எல்லாம்
தகர்த்து எறிய முடியுமடா

புரட்சி செய்ய படைகள் அல்ல
போர்க்குணம் ஒன்றே போதுமடா!!!